Posts

திரைப்பாடங்கள்

Image
சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிப்புப் பற்றி பலரும் நெகிழ்ச்சியோடு பேசுவதைப் பிரமிப்புடன் கேட்டிருக்கிறேன். ஆனால், எனக்கோ திரைப்படங்கள் மீது தான் ஆர்வம் அதிகம். சமீபத்தில் புத்தக வாசிப்பிலும் மூழ்க ஆரம்பித்துள்ளேன். ஏனோ, திரைப்படங்கள் வெறும் கேளிக்கையாக மட்டுமே பெரிதும் நம்ப வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திரைப்படங்கள் அதற்கானது மட்டும் இல்லை; அது பார்ப்பவரின் எண்ணத்தைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு அப்படியே கடந்து செல்ல முடியவில்லை. அவை, எனக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகின்றன; ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றன; இப்படி சிலாகித்துப் பேசிக் கொண்டே போகலாம். குறிப்பாக, திரைப்பாடல்கள் கூறும் தத்துவங்களும், கற்றுத்தரும் பாடங்களும் தனிச்சிறப்பு. அப்படி திரைப்பாடல்களில் இருந்து கற்கும் பாடங்களைப் பற்றிய இத்தொகுப்பே - "திரைப்பாடங்கள்" திரைப்பாடல்களைப் பற்றிப் பேசும் பொழுது சமீப காலமாக பாடல்களில் இசை பெரிதா? வரிகள் பெரிதா? என்னும் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. ஒன்றைத் தாழ்த்தி மற்றொன்றை உயர்த்தி மாரு தட்டிக் கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை. சரி, நமக்கு ஏன...

A Double Dhamakka

How does it feel to get a double bonanza - getting back to your passion and also work with wonderful people to create an impact in the society? Yes, I got such opportunity and it was an amazing journey of 1 year. It was almost an year after I came to Hyderabad. One day, I got a message from my fellow toastmaster friend in Bangalore about this NGO called U&I. Yes, you read it right!! It is U&I ("You and I"). And it was a call for teaching volunteers who can help take classes to underprivileged children over weekends.  Being a person who is very passionate about teaching, also with 3 years of experience as a home tutor and being part of an Edutech startup during the college days, I got more excited and filled the application form for teaching volunteers. I gave the interview and got selected to volunteer as well. The next thing came out of blue to me. There were no volunteering centres near my place and I got assigned with a centre which was around 20 kms away from my p...

ஒரு நிகழ்வு பல கேள்விகள்

அனைவருக்கும் வணக்கம்!! சமீபத்தில் நான் மேற்கொண்ட  பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்குப் பின் பல்வேறு கேள்விகள் எனக்கு எழுந்தன. அதை அசைபோடுவது மட்டுமின்றி இங்கே பதிவிட்டால் இன்னும் பல விடயங்கள் புலப்படும் என்று நம்புகிறேன். சென்ற வாரம் நான் நண்பர்களுடன் உத்தர்காண்ட் மாநிலத்திற்குச் சுற்றுலா சென்று வந்தேன். அதில் குறிப்பாக ஒரு நாள் முழுவதும் ஹரித்வாரைச் சுற்றிப் பார்த்தோம்.  அன்றைய நாள் முழுக்கக் கோவில் மயமாகவே இருந்தது. இளைஞர்கள் சேர்ந்து செல்லும் சுற்றுலாவில் கோவில் கோவிலாகச் சுற்றுவீர்களா எனச் சிலர் நகைத்ததும் உண்டு. நாங்கள் என்ன மஞ்ஞுமல் பாய்ஸா?  நாங்கள் மலைக்கோயில் பாய்ஸ்.. அன்றொரு நாள் முழுவதும் சில மலைகள் ஏறி இறங்கி இறைவனை வழிபட்ட வண்ணம் இருந்தோம் . சரி இந்த நிகழ்வில் என்ன கேள்விகள் என்றா கேட்கிறீர்கள். ஒன்றல்ல; பல.  நாங்கள் காலை முழுவதும் மூன்று கோவில்களுக்குச் சென்றோம்; மானசா தேவி, மாயா தேவி, சண்டி தேவி, அஞ்சனி தேவி ஆகியோரை வழிபட. இவை அங்கு மிகவும் பிரசித்திபெற்ற கோயில்கள். மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மலை ஏறி இறங்க சில கோயில்களில் படிக்கட்டுகள் இருந்...

ஆட்டம் ஆரம்பம்

 வெளி தோற்றத்திற்கு ஓர் அழகான குட்டை போல் இருந்தாலும் உள்ளே பல அழுக்குகளும் பாசிகளும் படிந்தே இருந்தன. அந்த குட்டை வேறு ஒன்றும் இல்லை என் ஆழ்மனம் தான். உள்ளே பல குமுறல்களும், கோபங்களும், கனவுகளும், கடந்த கால நினைவுகளும் இருந்தாலும், வெளியே ஏனோ ஓர் வெளுப்புச் சாயம் பூசிக்கொண்டது போல் இருந்தது. அந்தக் குட்டை தன் நிலை அறிய அடிக்கடி கல் வீசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். அப்படி என் நிலை அறிய எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது "வேட்கையோடு விளையாடு" எனும் புத்தகத்தில் உள்ள ஓர் கட்டுரை வாசிப்பும், அந்தப் புத்தகத்தின் எழுத்தாளரான ஈரோடு கதிர் அவர்களுடனான உரையாடலும்.   அதில் அவர் குறிப்பிட்டுள்ள லட்சியம், கனவு, ஆசை, நோக்கம், விருப்பம் பற்றிய புரிதல் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. பல கனவுகள் இருப்பினும், அதற்கான தேடலோ மெனக்கெடலோ, ஏன் ஓர் முதல் அடியே இன்னும் நாம் எடுத்து வைக்கவில்லை என்று தோன்றிய தருணம் ஓர் சவுக்கடி போல் இருந்தது. பொதுவாகவே நான் ஓர் குற்றச்சாட்டு வைப்பதுண்டு .  எனக்கு இந்த இருபத்து நான்கு மணி நேரம் போதவே இல்லையே. கூடுதல் நேரம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கு...