ஒரு நிகழ்வு பல கேள்விகள்
அனைவருக்கும் வணக்கம்!! சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்குப் பின் பல்வேறு கேள்விகள் எனக்கு எழுந்தன. அதை அசைபோடுவது மட்டுமின்றி இங்கே பதிவிட்டால் இன்னும் பல விடயங்கள் புலப்படும் என்று நம்புகிறேன். சென்ற வாரம் நான் நண்பர்களுடன் உத்தர்காண்ட் மாநிலத்திற்குச் சுற்றுலா சென்று வந்தேன். அதில் குறிப்பாக ஒரு நாள் முழுவதும் ஹரித்வாரைச் சுற்றிப் பார்த்தோம். அன்றைய நாள் முழுக்கக் கோவில் மயமாகவே இருந்தது. இளைஞர்கள் சேர்ந்து செல்லும் சுற்றுலாவில் கோவில் கோவிலாகச் சுற்றுவீர்களா எனச் சிலர் நகைத்ததும் உண்டு. நாங்கள் என்ன மஞ்ஞுமல் பாய்ஸா? நாங்கள் மலைக்கோயில் பாய்ஸ்.. அன்றொரு நாள் முழுவதும் சில மலைகள் ஏறி இறங்கி இறைவனை வழிபட்ட வண்ணம் இருந்தோம் . சரி இந்த நிகழ்வில் என்ன கேள்விகள் என்றா கேட்கிறீர்கள். ஒன்றல்ல; பல. நாங்கள் காலை முழுவதும் மூன்று கோவில்களுக்குச் சென்றோம்; மானசா தேவி, மாயா தேவி, சண்டி தேவி, அஞ்சனி தேவி ஆகியோரை வழிபட. இவை அங்கு மிகவும் பிரசித்திபெற்ற கோயில்கள். மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மலை ஏறி இறங்க சில கோயில்களில் படிக்கட்டுகள் இருந்...